fbpx

டி20 கிரிக்கெட்டில் அசத்தல் சாதனை..! ரோகித் சர்மாவை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா அதிரடி..!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார்.

பார்படாஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் முதல் 5 ரன்களை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்தார். இந்திய ஆடவர் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 2, 973 ரன்கள் எடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா 2,000 ரன்களை கடந்து சாதனைப் படைத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் அசத்தல் சாதனை..! ரோகித் சர்மாவை தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா அதிரடி..!

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி 79 இன்னிங்சில் 2,004 ரன்களை ஸ்மிருதி மந்தனா குவித்துள்ளார். இதன்மூலம் அவரது சராசரி 27.45 ஆகும். அவர் 14 அரைசதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 86 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா, ஸ்மிருதி மந்தனாவை தொடர்ந்து, இந்திய ஆடவர் அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான தவான் 1,759 ரன்களும், இந்திய மகளின் அணியின் மிதாலி ராஜ் 1,407 ரன்களும் எடுத்துள்ளனர்.

Chella

Next Post

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்..! பாரா பளுதூக்குதலில் இந்திய வீரர் சுதிர் அசத்தல்..!

Fri Aug 5 , 2022
காமன்வெல்த் போட்டியில் பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் சுதிர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். இந்தியாவை சார்ந்த 111 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 215 பேர் 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், […]
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6 தங்கம்..! பாரா பளுதூக்குதலில் இந்திய வீரர் சுதிர் அசத்தல்

You May Like