டி20 உலகக்கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.12.98 கோடி தொகை பரிசு கிடைத்துள்ளது.
8-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
![அடேங்கப்பா..!! டி20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து..!! மொத்தம் ரூ.45.40 கோடி பரிசு..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/11/Team-England-celebrate-with-trophy_1847101c923_original-ratio.jpg)
உலகக்கோப்பை போட்டியை வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.1.6 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.12.98 கோடியும், 2-வது இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 6.49 கோடியும் கிடைத்துள்ளது. அரையிறுதியில் தோல்வியை சந்தித்து வெளியேறிய இந்தியா, நியூசிலாந்து அணிகள் தலா ரூ.3.24 கோடி பெற்றுள்ளன. சூப்பர் 12 சுற்றிலிருந்து வெளியேறிய 8 அணிகளும் தலா ரூ.56.77 லட்சம் பெற்றுள்ளன. டி20 உலகக்கோப்பை போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.45.40 கோடியாகும்.