fbpx

ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாத சென்னை சூப்பர் கிங்ஸ் – ரசிகர்கள் ஏமாற்றம்…

கொச்சியில் நடந்த ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரிலிருந்து ஏகப்பட்ட வீரர்கள் விளையாட வருகின்றனர். ஆனால் இவர்களில் யாராவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினால் அது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் பெருமையாக இருக்கும். ஆனால் கொச்சியில் நடந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு தமிழக வீரரை கூட தேர்வு செய்யாமல் இருந்தது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

சிஎஸ்கே விடுவித்த நாராயணன் ஜெகதீசன், தமிழக ஆல்ரவுண்டர் பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ் ஆகியோர்ர் சிஎஸ்கே அணியால் எடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் சிஎஸ்கே கைவிட்டுவிட்டது. ஒரு காலத்தில் அஸ்வின், முரளி விஜய், பத்ரிநாத், பாலாஜி என தமிழக வீரர்கள் சிஎஸ்கே அணியில் முக்கிய அங்கம் வகித்தனர். ஆனால் தற்போது சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறுவதில்லை. ஏலத்தில் கூட சிஎஸ்கே தமிழக வீரர்களை தேர்வு செய்வதில்லை. இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தையும் ஆத்திரத்ததையும் ஏற்படுத்தி உள்ளது. மாறாக இம்முறை 2 இலங்கை அணி வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். இது தமிழர்களை வேண்டுமென்றே இழிவுபடுத்தும் செயல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kokila

Next Post

சப்போட்டா பழம் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள்? வாங்க விரிவாக பார்க்கலாம்…

Sat Dec 24 , 2022
ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’ என்றும் ‘சப் போடில்லா’ என்றும் கூறுவர். வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்பு உண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. சப்போட்டாவில்  உள்ள சத்துகள் மற்றும் பயன்கள் வைட்டமின் சி மற்றும் ஏ,  நார்சத்து,  புரோட்டின் , இரும்புசத்து,  கால்சியம்,  […]

You May Like