fbpx

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி..!!

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியா-ஜிம்பாப்வேக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஜிம்பாப்வே அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய கைடானோ 7 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் இன்னசென்ட் கையா 16 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். கேப்டன் ரெஜிஸ் சகாப்வா மற்றும் வெஸ்லி மாதேவெரே தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி..!!

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக விளையாடிய சீன் வில்லியம்ஸ் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் ஹூடா பந்துவீச்சில் அவரும் ஆட்டமிழந்தார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். பின்னர், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஓப்பனராக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சுப்மான் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுபுறம் அதிரடியாக விளையாடிய தவான் 33 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி..!!

அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்களுக்கு நடையைக் கட்ட, சுப்மான் கில்லும் 33 ரன்களில் வெளியேறினார். பின்னர் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால், இந்திய அணி 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

Chella

Next Post

ஜெயலலிதா மரணம்..! எய்ம்ஸ் மருத்துவக் குழு பரபரப்பு அறிக்கை..!

Sun Aug 21 , 2022
ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளும் முறைப்படி வழங்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான விசாரணையில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையிலான 7 பேர் உள்ளடக்கிய எய்ம்ஸ் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆணையத்தில் அளிக்கப்பட வாக்குமூலங்களில் ஆவணங்களையும், அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 3 […]

You May Like