fbpx

தேசிய கீதம் பாடும்போது கே.எல்.ராகுல் செய்த நெகிழ்ச்சி செயல்..! குவியும் பாராட்டு..!

இந்தியா-ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பு கே.எல்.ராகுல் செய்த செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நேற்று ஜிம்பாப்வேயில் தொடங்கியது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக வழி நடத்தினார். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கே.எல்.ராகுல், நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த தொடரில் பங்கேற்றார். நேற்றையப் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து, ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் கே.எல்.ராகுல். இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டனாக விளையாடிய நிலையில், அந்த 3 போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தது.

தேசிய கீதம் பாடும்போது கே.எல்.ராகுல் செய்த நெகிழ்ச்சி செயல்..! குவியும் பாராட்டு..!

நடந்து முடிந்த ஒரு நாள் போட்டியில் கே.எல்.ராகுல் நான்காம் நிலை வீரராக களமிறங்க இருந்தார். சமீபகாலமாக அவர் விளையாடாத போதிலும் எதற்காக அணியில் இடம் அளித்தீர்கள் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், இந்தியா ஒரு விக்கெட்டுகள்கூட இழக்காமல் வெற்றி பெற்றது. இதனால், அவர் திறமையை அவரால் நிரூபிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அவரது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெற முடியாத நிலையிலும், விளையாட்டு மைதானத்தில் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து செய்த செயலால் பாராட்டப்பட்டு வருகிறார்.

தேசிய கீதம் பாடும்போது கே.எல்.ராகுல் செய்த நெகிழ்ச்சி செயல்..! குவியும் பாராட்டு..!

இந்தியா ஜிம்பாப்வே இடையேயான முதல் ஒரு நாள் போட்டியின்போது, தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்பாக அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் தான் மென்று கொண்டிருந்த சுவிங்கம்மை அகற்றி இருக்கிறார் கேஎல் ராகுல். அந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெட்டிசன்கள் கே.எல்.ராகுலை பாராட்டி வருகின்றனர்.

https://twitter.com/kunaalyaadav/status/1560170997877071872?s=20&t=VNtVGYg2ZFY5rWbgeiothA

Chella

Next Post

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: தனியாக இருந்தவரிடம் மர்ம நபர்கள் வெறிச்செயல்.!

Fri Aug 19 , 2022
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவர் பனை ஏறும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுயம்புகனி (55). இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். சுயம்பு தைக்காவூர் பகுதியில் தங்கியிருந்து பனை ஏறும் தொழில் செய்து வருகிறார். வீட்டில் தனியாக வசித்து வந்த சுயம்புகனி கடந்த 14 ஆம் தேதி […]

You May Like