சமீப காலமாக திரையுலகினர் மத்தியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே பாலிவுட், டோலிவுட் மற்றும் மாலிவுட்டை சேர்ந்த சிலர் போதை மருந்து வழக்கில் சிக்கிய நிலையில், தற்போது கோலிவுட் திரை உலகிலும் போதைப் பொருள் பழக்கமும், போதை மருந்து பார்ட்டியும் அதிகரித்து வருவதாக வெளியாகி உள்ள தகவல், அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், தடை செய்யப்பட்ட கொக்கேன் என்கிற போதை பொருளை பயன்படுத்திய குற்றத்திற்காக நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, தனக்கு போதை பொருள் கொடுத்தது. தன்னை வைத்து ‘தீக்கிரை’ என்கிற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரும், அதிமுக முன்னாள் நிர்வாகியுமான பிரசாந்த் என்பவர் தான் என்று நடிகர் ஸ்ரீகாந்த் தன்னுடைய வாக்குமூலத்தில் கூறியிருந்தார். தீக்கிரை திரைப்படத்தில் நடிக்கும் போது, அவர் தனக்கு கொடுக்க வேண்டிய பத்து லட்ச ரூபாய் பணத்தை கேட்டபோதெல்லாம், பிரசாத் தனக்கு போதை பொருளை கொடுத்து மெல்ல மெல்ல அதற்கு அடிமையாக்கியதாக தன்னுடைய வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.
அதை போல் ஸ்ரீகாந்தியின் செல்போனை சோதனை செய்தபோது அவர் சுமார் 4.7 லட்சம் ரூபாய்க்கு போதை பொருள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கிராம் போதை பொருளை ரூபாய் 12000 கொடுத்து ஸ்ரீகாந்த் வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஸ்ரீகாந்த் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருள் வழக்கில் சிக்கி உள்ள நிலையில், மேலும் ஒரு சாக்லெட் பாய் நடிகருக்கு தொடர்பு இருப்பதாகவும், இவர்தான் மெயின் வில்லன் என்றும் பாடகி சுசித்ரா பரபரப்பு தகவலை கிளப்பியுள்ளார்.
சுசித்ரா கூறியதாவது, ஸ்ரீகாந்த் பலியாடுதான். அவரைத் தாண்டி மிகப்பெரும் நெட்வொர்க் இருக்கிறது. அவர்கள் தான் இந்த பொருளை சப்ளை செய்யும் டீலர்கள், அதேபோல் ஒரு பெரும் புள்ளி தான் இந்த விஷயத்தை கிளறி விட்டுள்ளார். ஆனால் அவர்களுக்கு தேவையில்லாதவர்கள் மீதுதான் நடவடிக்கை பாயும். நெருக்கமானவர்கள் தப்பித்து விடுவார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த சாக்லெட் பாய் நடிகர், ஒரு நிழலுலக தாதா பின்னணியில் செயல்பட்டு வருவதாக கூறிய சுச்சித்ரா, அவருக்கு சொந்தமான வீட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகள் எல்லாம் கொட்டி கிடக்கிறது.
அதேபோல் பிரபலமான நடிகை ஒருவரும் இவருடன் கூட்டணி தான். அது மட்டும் இன்றி விஜய் சேதுபதி பெயர் கூட இதில் அடிபட்டு வருகிறது. அவர் மட்டுமல்லாமல் இன்னும் பலர் இருப்பதாகவும் சுசித்ரா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த சாக்லேட் பாய் ஹீரோவை போலீசார் பிடித்தால் மொத்த வழக்கும் முடிந்துவிடும். ஆனால் அது அவ்வளவு சுலபம் கிடையாது.
Readmore: ரூ.2000க்கு இப்படியா?. லைவ் வீடியோவில் கணவன் – மனைவி செக்ஸ்!. அதிர்ச்சியளிக்கும் பின்னணி!