என்ன கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் இல்லையா…..? தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு….!

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதிக்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பாக நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு இடையில் நினைவிடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் கடலில் கருணாநிதியின் நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் 134 அதை உயரத்திற்கு பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.


மத்திய அரசும் இதற்கு அனுமதி அளித்திருக்கின்ற நிலையில் 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி முதற்கட்ட பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் தான் பேனா நினைவு சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு கிளம்பியது. அதோடு, இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் தான் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவை தமிழக அரசு வாபஸ் பெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அடுத்த மாதம் 7ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் திறக்கப்பட இருக்கிறது. கடலுக்கு பதிலாக நினைவிடத்திலேயே பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஸ்டாலின் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

Next Post

வடமாநிலங்களில் கனமழை…..! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை……!

Sun Jul 16 , 2023
சென்ற சில தினங்களாகவே வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் சூழ்நிலையில், கனமழை மிகவும் கடுமையாக பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. அந்த விதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இதுவரையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் அதேபோல ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் […]

You May Like