என்.எல்.சி தொடர்பாக இனிவரும் காலங்களில் மிகக் கடுமையான போராட்டங்கள் நடைபெறும்….! பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு…..!

என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், நெய்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.


இதனைத் தொடர்ந்து பேசிய அவர், என்எல்சி சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்படைந்து இருப்பதாகவும் ஸ்டெர்லைட் ஆலையை விட என்எல்சி நிறுவனம் 100 மடங்கு ஆபத்தானது எனவும் கூறினார் நிலம் கொடுத்தவர்கள் அகதிகளாக இருப்பதாகவும், என் எல் சி நிறுவனம் 60 ஆண்டு காலமாக ஏமாற்றி வருவதாகவும் அன்புமணி ராமதாஸ் குற்றம் சுமத்தினார்.

காவல்துறையினரை குவித்து வைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டி நிலத்தை கையகப்படுத்துவதாக குற்றம் சுமத்திய அவர், தமிழகத்திற்கு எந்த விதமான பலனும் இல்லாததால் என்எல்சி நிறுவனம் தேவை இல்லை என்று கூறினார். இனி கடுமையான போராட்டங்கள் ஆரம்பமாகும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

Next Post

காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணுக்கு கத்திக்குத்து.,..! கோவை அருகே பயங்கரம்….!

Sun Mar 26 , 2023
கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவர் ஏற்கனவே தன்னுடன் கல்லூரியில் படித்த இளம் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், அந்த பெண் பணியாற்றும் நிறுவனத்திற்கு சென்ற இளைஞர் ஸ்ரீராம் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கு அந்த இளம் பெண் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட அந்த இளைஞர் தான் மறைத்து […]
பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like