ஆரணி அருகே பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பள்ளி மாணவர்கள் தேர்வை புரக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். புகைப்பிடித்து மாணவியின் முகத்தில் ஊதியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. மாணவரை அடித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். ஆசிரியருடன் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த மாணவர் புகார் தெரிவித்துள்ளார்.
இதனால் 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்தும் , 2 ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தும் உத்தரவிடப்பட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவி்த்து ஆசிரியர்கள் மீது தவறு எதுவும் இல்லை எனக்கூறி அவர்களுக்கு விதிக்கப்படட உத்தரவை திரும்பப் பெறக் கோரி தேர்வை புறக்கணித்தனர்.
பள்ளியின் வாசல் முன்பு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேலூர்,ஆரணிநெடுஞ்சாலையில்போக்குவரத்துபாதிக்கப்பட்டது.தகவல்அறிந்துவந்தகாவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.