பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிப் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணிக்கும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் உரிமை காவல்துறைக்கு உள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கிப் பயணிப்பது உயிருக்கு ஆபத்தானது என்றும், மாணவர்களுக்கு பள்ளி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வு, பெற்றோர் பொறுப்பும், மாணவர்களின் ஒழுக்கமும் முக்கியம் எனக் கூறியது.
படிக்கட்டுகளில் மாணவ-மாணவிகள் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் வருகிறது. நடத்துனர் அறிவுரை வழங்கினாலும் மாணவர்கள் ஏற்பது இல்லை. இது தண்டனைக்குரிய குற்றம். காவல்துறையினர் வழக்குப்பதிவு கூட செல்லாம். இதனால் மாணவர்கள் பேருந்துக்குள் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனையும் மீறி படிக்கட்டுகளில் பயணம் செய்வோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இந்த தீர்ப்பு தமிழகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: திமுக பொதுச் செயலாளராகும் உதயநிதி..? துரை முருகன் மீது ஸ்டாலின் அதிருப்தியாம்..!!