மாணவர்களே..!! பிளஸ்1 பொதுத்தேர்வு முறையில் திடீர் மாற்றம்..? அமைச்சரே சொன்ன முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை கைவிட வேண்டும் ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தேர்வு நடைமுறையில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சொன்ன பதிலை தற்போது பார்க்கலாம்.


தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று இருந்த முறை கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்டு 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 11ஆம் வகுப்பு படிக்கும் போதே மாணவர்களுக்கு 11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 12ஆம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், இதையும் கருத்தில் கொண்டே 11ஆம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முறை கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து பழைய முறையை கொண்டு வர வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது இதற்கு பதிலளித்த அவர், ”பிளஸ்1 பொதுத்தேர்வு நடைமுறையில் இப்போது வரை எந்த மாற்றமும் கிடையாது. பொதுத்தேர்வு நடைபெறும் என்ற வகையில்தான் தற்போதும் இருக்கிறது. ஆசிரியர் சங்கங்கள் உடன் பகிரப்பட்ட கருத்துகள் அனைத்தும் மாநில கல்வி கொள்கை குழுவிடம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

CHELLA

Next Post

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Sun Jun 25 , 2023
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜுன் […]
942813 railway recruitment board

You May Like