தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்…! அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு…!

Anbil Mahesh School Mask 2025

பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.


பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்; பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மொழியின் சிறப்பையும், அதில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது.

அதேபோல் ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும். எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும். நாங்களும் வெற்றி பெற வேண்டும். நாங்களும் வெற்றி பெற வேண்டும். அரசு விழாவில் அரசியலா என்று நினைக்க வேண்டாம்., நான் அரசியல் பேசவில்லை., அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன் என்றார்.

Vignesh

Next Post

கட்டுக்கடங்காத கூட்டம்..!! அடங்காத தொண்டர்கள்..!! அப்செட்டான விஜய்..!! பாய்ந்தது வழக்கு..!!

Sun Sep 21 , 2025
2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தனது பேச்சில், “மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாகையில், நவீன மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. இலங்கை கடற்படையால் […]
Nagai Vijay 2025

You May Like