சூடானில் உச்சக்கட்ட கலவரம்.. இந்தியர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்.. இந்தியத் தூதரகம் எச்சரிக்கை..

ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது சூடான் கலவர பூமியாக மாறியிருக்கிறது. சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வலுப்பெற்றுள்ளது… இதனையடுத்து சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது. நாடு முழுவதும் கலவரம் பரவத் தொடங்கியுள்ளது.


மேலும் அதிபர் மாளிகையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக துணை ராணுவப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் கலவரம் வெடித்துள்ளது.. இந்த கலவரத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். நாட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் சூடானில் உள்ள இந்திய துணை தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, சூடானில் துப்பாக்கிச் சூடும், கலவரமும் நடந்து வருதால் அங்கிருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் யாரும், வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும், அடுத்த தகவலுக்கு காத்திருங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

1newsnationuser1

Next Post

சிஆர்பிஎஃப் தேர்வு!... தமிழ் உட்பட் 13 மொழிகளில் எழுதலாம்!... மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Sun Apr 16 , 2023
சிஆர்பிஎஃப் தேர்வு எழுதுவோர் தற்போது தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் தங்கள் தேர்வுகளை எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய உள்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையான சிஆர்பிஎஃப் (CRBF) படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பமானது, கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கியது. இறுதிநாள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை […]
crpf2 1602315913

You May Like