கோடை வெயிலில் சர்க்கரை நோயாளிகள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கான சில குறிப்புகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளிட்டவைகளை அவ்வபோது சேர்த்துகொள்வோம். ஆனால், சர்க்கரை நோயாளிகள் கோடையில் அதிக சோர்வை உணர்கிறார்கள். இது வியர்வை சுரப்பிகளை பாதிக்கிறது. இதனால் உடலில் இருந்து விரைவாக தண்ணீர் இழப்பு ஏற்பட்டுவிடும். ஏனெனில் அதிக சர்க்கரை அளவு ஒரு நபருக்கு அதிக சிறுநீர் கழிக்க காரணமாகிறது. இதனால் விரைவாக அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுவிடும். வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தேவையான இன்சுலின் அளவைக் கண்டறிய, அவர்களுடைய ரத்த சர்க்கரையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
கோடையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தினமும் காலையிலும் மாலையிலும் 30 நிமிடங்கள் நடக்க முயற்சி செய்யுங்கள். உணவுக்கு 1-3 மணி நேரம் கழித்து லேசான உடற்பயிற்சியும் ரத்த சக்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது. இத்தகைய உணவுகள் உடல் எடையை குறைக்க உதவும். அதே நேரத்தில் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும் நார்ச்சத்து உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் ஓட்ஸ், பழுப்பு அரிசி, முழு தானியங்கள், பழங்கள், விதைகள், கொட்டைகள், கேரட் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகள் அடங்கும்.
கோடைக் காலத்தில் பெரும்பாலான மக்கள் பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்தி போன்றவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகள், நார்ச்சத்து அதிகம் இல்லாத பழங்களை சாப்பிடக் கூடாது. இதனால் உடலில் இயற்கையான கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள பழச்சாறுகள் குளுக்கோஸ் அளவை மிக விரைவாக உயர்த்திவிடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பது உடலில் சர்க்கரையை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே, கோடை காலத்தில் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது பல்வேறு வகையில் நன்மையை தருகிறது.