தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கொள்கை விளக்க குறிப்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, விழா காலங்களில் மட்டும் தான் விரைவுப் பேருந்துகளில் அதிகளவு மக்கள் பயணம் செய்கின்றனர். மற்ற நேரங்களில் அதிக அளவில் பயணம் செய்வதில்லை. இதனால், தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்தால் அவர்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதனால், விரைவு பேருந்துகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சொந்த ஊர் திருவிழாக்கள் கலை கட்டி வருவதால், உள்ளூர் விடுமுறைகளும் அதிகமாக விடப்படுகிறது. அதனால், இந்த விரைவுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.