சூப்பர் குட் நியூஸ்..!! தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து..!! பயணிகளுக்கு கட்டண சலுகை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கொள்கை விளக்க குறிப்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, விழா காலங்களில் மட்டும் தான் விரைவுப் பேருந்துகளில் அதிகளவு மக்கள் பயணம் செய்கின்றனர். மற்ற நேரங்களில் அதிக அளவில் பயணம் செய்வதில்லை. இதனால், தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்தால் அவர்களுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


இதனால், விரைவு பேருந்துகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே சொந்த ஊர் திருவிழாக்கள் கலை கட்டி வருவதால், உள்ளூர் விடுமுறைகளும் அதிகமாக விடப்படுகிறது. அதனால், இந்த விரைவுப் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CHELLA

Next Post

100 நாள் வேலை திட்டம்..!! ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு..!! அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு..!!

Thu Mar 30 , 2023
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சொந்தமாக தொழில் செய்ய முடியாமல், ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய முடியாமல் சிறப்புத் திறன் இல்லாத மக்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இது முழுக்க முழுக்க உடல் உழைப்பு சார்ந்தது. ஒரு ஆண்டுக்கு 100 வேலை நாட்கள் என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனால் இத்திட்டம் 100 […]
100 Days Work

You May Like