பொறியியல் படிப்பை முடித்தவர்கள், மலேசியாவில் சேர்ந்து பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என்று அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
பணியிடங்கள்: மலேசியாவில் பணிபுரிய QC INSPECTOR, PIPING ENGINEER, PLANNING ENGINEER, TENDERING ENGINEER, PIPING FOREMAN, PIPE FITTER மற்றும் TIG & ஏஆர்சி வெல்டர் சிஎஸ் தேவைப்படுகிறார்கள்.
என்னென்ன தகுதி: மலேசியாவில் பணிபுரிய பி.இ. மற்றும் பி.டெக். தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 இருந்து 42 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்: AC Inspector (Cswip 3.1) பணிக்கு மாத வருமானம் ரூ. 70,000 – 80,000/-, PIPING Engineer பணிக்கு, ரூ.60,000 – 80,000/-. Planning Engineer (Primevara P6) பணிக்கு ரூ 70,000-84,000/- வழங்கப்படும். அதேபோல, Tendering Engineer பணிக்கு ரூ. 70,000 – 76,000/-, Piping Foreman பணிக்கு ரூ. 54,000-62,400/- ஆகும். TIG & ARC Welders CS பணிக்கு மாத வருமானம் ரூ. 41,600-50,000 மற்றும் Pipe Filter பணிக்கு ரூ. 38,000-50,000/- ஊதியமாக வழங்கப்படும்.
உணவு, விசா இருப்பிடம் மற்றும் விமானப் பயணச் சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.
எப்படி விண்ணப்பிப்பது? மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை 29.05.2025க்குள் அனுப்பவும். கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண் (044- 22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்.