சூப்பர் நியூஸ்..!! 12-வது தவணைத் தொகை..!! விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று டெபாசிட்..!!

பிஎம் கிஷான்’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான 12-வது தவணைத் தொகை இன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், மிக முக்கியமான திட்டம் தான் ’பி எம் கிசான்’ (PM Kisan) திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

சூப்பர் நியூஸ்..!! 12-வது தவணைத் தொகை..!! விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று டெபாசிட்..!!

இறுதியாக கடந்த மே 30ஆம் தேதி 11-வது தவணை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 4 மாதங்களுக்கு ஒரு முறை பிரதமர் கிசான் தவணைத் தொகையான 2,000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், மிக விரைவில் பன்னிரண்டாவது தவணைத் தொகையும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில், 12-வது தவணை விவசாயிகள் வங்கிக் கணக்கில் இன்று செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்துள்ளார். இதற்காக 16 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டு திட்டம்‌...! விவசாயிகளே உடனே விண்ணப்பிக்கவும்....!

Mon Oct 17 , 2022
விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களினால்‌ ஏற்படும்‌ மகசூல்‌ இழப்புகளை பாதுகாக்க திருந்திய பிரதம மந்திரி பயிர்‌ காப்பீட்டு திட்டம்‌ 2016-ம்‌ ஆண்டு முதல்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ சிறப்பு மற்றும்‌ ரபி பருவத்தில்‌ பயிர்‌ காப்பீடு திட்டத்தை செயல்படுத்திட தருமபுரி மாவட்டத்தில்‌ பஜாஜ்‌ அலையன்ஸ்‌ ஜெனால்‌ இன்சூரன்ஸ்‌ கம்பெனி லிமிடெட்‌ நிறுவனம்‌ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ நெல்‌பயிர்‌ காப்பீட்டு செய்ய கடைசி நாள்‌ 15.11.2022 ஆகும்‌. எனவே இத்திட்டத்தின்‌ […]
tn goverment farments

You May Like