தருமபுரி மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படும் போது வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ் நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்யலாம்.
https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பெயர், மொபைல், எண் முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களை கொடுக்க வேண்டும். இதனையடுத்து மொபைல் நம்பர், ஐடி , பாஸ்வேர்டு கொடுத்து உள்ளே நுழைய வேண்டும். உட்பிரிவு இல்லாத நிலம், உட்பிரிவு உள்ள நிலம் ஆகிய லிங்கில் ஒன்றை தேர்வு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏ. ஜெட்டிஅள்ளி கிராமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் விற்பனை செய்யப்பட்டு கிரயம் பெற்றுள்ள உரிமையாளர்கள் பட்டா மாற்றம் செய்து கொள்ளாமல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பெயரிலேயே உள்ளன. மேற்படி வீட்டுமனைகளை கிரயம் பெற்றுள்ள உரிமைதாரர்கள் தங்களிடம் உள்ள கிரய பத்திரம் வில்லங்க சான்று மற்றும் உரிய ஆவணங்களுடன் பட்டா மாற்றம் தொடர்பான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மனு செய்து பட்டா மாற்றம் செய்து பயனடையலாம்.
எனவே இன்று ஒட்டப்பட்டி ராஜகணபதி கோயில் அருகில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வள்ளுவர் நகர் ஏ. ஜெட்டிஅள்ளி திட்ட பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் ஒதுக்கீடு பெற்ற கிரயம் பெற்றவர்கள் மேற்கண்ட நாளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Read More: யுபிஎஸ்சியில் 850 + காலியிடங்கள்..!! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.56,100 சம்பளம்..!!