காஷ்மீர் 370-வது பிரிவு ரத்து வழக்கு…! 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11-ம் தேதி விசாரணை…!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.


இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஜூலை 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, அந்த மாநிலம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Vignesh

Next Post

திருமணமான ஆண்கள் தற்கொலை!... ஆண்கள் தேசிய ஆணையம்' அமைப்பதற்கான பொதுநல மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

Tue Jul 4 , 2023
ஆண்கள் தேசிய ஆணையம் அமைக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு செயல்பட உள்ளது. இதில் இன்று முக்கிய வழக்குகளாக மணிப்பூர் கலவரம், தன்பாலின திருமண ஒப்புதல், ஆண்கள் ஆணையம் அமைக்க பொதுநல மனு உள்ளிட்ட வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தேசிய அளவில் ஆண்கள் ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் […]

You May Like