“ஒரு தெருநாயை கூட விடக்கூடாது.. அனைத்தையும் காப்பகங்களில் அடைங்க..!!” – உச்சநீதிமன்றம் அதிரடி..

dog court 750x422 1

டெல்லியில் சுற்றித்திரியும் அனைத்து தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெரு நாய் கடி சம்பவங்களை தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தெருநாய்களைப் பிடிக்க அதிகாரிகளுக்கு தடையாக இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் அல்லது அமைப்புக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் தலைமையிலான அமர்வு, 5,000 தெருநாய்களை தங்க வைக்கும் வசதியுடன் நாய் காப்பகங்கள் அமைக்கவும், போதுமான பணியாளர்கள் நியமித்து கருத்தடை, தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

கைக்குழந்தைகள், சிறுவர் யாரும் வெறிநாய் கடிக்கு ஆளாகக் கூடாது; ரேபிஸ் நோய் பரவாமல் தடுப்பதே எங்கள் நோக்கம், என பெஞ்ச் தெரிவித்தது. மேலும், நாய் கடி சம்பவங்கள் குறித்து உடனடியாகப் புகாரளிக்க ஒரு வாரத்திற்குள் உதவி எண்ணை தொடங்கவும் உத்தரவிடப்பட்டது. ஜூலை 28 அன்று டெல்லியில் நாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டதாக வந்த செய்தியை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Read more: இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை.. ரூ.1,40,000 சம்பளம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

Supreme Court directs Delhi authorities to pick up stray dogs, keep them in shelters

Next Post

ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை..! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணி..! மிரள வைக்கும் வீடியோ..

Mon Aug 11 , 2025
கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், யானை தாக்குதலில் இருந்து கேரள சுற்றுலாப் பயணி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். யானை பின்வாங்கியபோது, அந்த நபர் காயங்களுடன் தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பந்திப்பூர் தேசிய பூங்காவிற்குள் வாகனங்கள் மற்றும் மக்கள் நிறைந்த சாலையில் காட்டு யானை நிற்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது… சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஒரு யானை […]
tourist elephant Bandipur Tiger Reserve 1280x720 1

You May Like