பணம் கொடுத்து கத்தி கூச்சலிட சொன்ன சூரி..!! இப்படி ஒரு விளம்பரம் தேவையா..?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ’விடுதலை’ படம் இம்மாதம் கடைசியில் வெளியாகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், சூரி மட்டுமே நிறைய நேரம் பேசினார். நிறைய கஷ்டங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். ஆனால் இவர் பேசும்போதும் சரி, இவர் பெயரை யாரும் சொன்னாலும் சரி உச்ச நட்சத்திரங்கள் பெயர்களை கூறும்பொழுது கைத்தட்டல் வருவது மாதிரி இவருக்கு வந்து கொண்டே இருந்தது. அதன் பின் மேடையில் படக்குழுவினர் அமர்ந்து படத்தைப் பற்றி பேசினார்கள். யார் மேடையில் பேசினாலும் சூரி என்று சொன்னால் சத்தம் போடுங்கள் என்று சொல்லி கூட்டத்தை திரட்டியது போலவே அங்கிருப்பவர்கள் கத்தி கூச்சலிட்டனர்.


அவர்களது சத்தம் ஒரு கட்டத்தில் ஓவராக போக சூரி எழுந்து நின்று கையெடுத்து கும்பிட்டு நிறுத்த சொன்னார். இதெல்லாம் சூரிக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது. இதே போன்று தான் காமெடி நடிகர் சந்தானமும் ஹீரோவாக நடித்த போது அவரது பட விழாக்களிலும் இப்படி ஆட்களை வரவழைத்து ஆரவாரம் செய்ய சொன்னார்கள். கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததும் காசு கொடுத்து கூட்டத்தை சேர்க்க விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார் என்று விழாவிற்கு வந்தவர்கள் முணுமுணுத்தனர். இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை இசைக்குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர்.  ஆனால் அதைக் கூட கேட்க விடாமல் அவ்வப்போது சூரியின் ரசிகர்கள் கத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் இருப்பவர்கள் ரசிகர்களை விட அரசியல்வாதிகளின் கூட்டத்திற்கு தயார் செய்யப்பட்ட ஆதரவாளர்கள் போலவே நடந்து கொண்டனர். இவர்கள் ரசிகர் மன்ற பேனர்களுடன் விழா அரங்கில் அமர்ந்து கொண்டு சூரி என்ற பெயரை உச்சரித்து சத்தமிட்டு கொண்டிருந்தனர். கடைசியில் இளையராஜா வந்த பிறகு நேரடியாக மேடை ஏறி இசையை வெளியிட்டார். அவர் பேசும்போது சத்தம் போட்டனர். இதனால் தான் இளையராஜா கடுப்பாகி மைக்கை தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டார். காரணம் இந்த விழாவுக்காக சூரி தமது சொந்தக்காரர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் மூலம் 4, 5 வேன்களில் மதுரையில் இருந்து செலவு செய்து ஆட்களை அழைத்து வந்துள்ளார். ஒரு படம் நன்றாக நடித்துள்ளார். அதற்கான பெயரும் அவர் வாங்கியுள்ளார். ஆனால் அதற்குள்ளே பணத்தை கொடுத்து ஆட்களை அழைத்து வந்து கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று செய்தது சினிமாவில் அவரை கேவலமாக பார்க்கிறார்கள்.

CHELLA

Next Post

விளையாட்டாய் ஆரம்பித்த சண்டை…..! இறுதியில் உயிரை பறித்த கொடூரம் திருச்சியில் பரிதாபம்……!

Sun Mar 12 , 2023
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருக்கின்ற பாலசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விளையாட்டாக சிறு, சிறு கற்களை வீசியதை குறித்து தோளூர் பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கோபி என்பவரின் மகன் மவுலீஸ்வரன்(15) என்ற மாணவருடன் சக மாணவர்கள் 3 பேர் தகராறு செய்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் அந்த மாணவரை தாக்கி […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like