இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருந்து போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தான் நோக்கி சுமார் 240 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று ஜாவா கடலில் திடீரெனத் தொடர்பை இழந்தது. கப்பலையும் அதில் உள்ளவர்களையும் கண்டறியும் பணியில் அவசரகால மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுரபாயா நகரத்திலிருந்து பஞ்ஜர்மசின் (Banjarmasin) நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பல், ஜாவா கடற்பகுதியில் பயணம் செய்தபோது திடீரென தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றது. […]

