திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு, வழக்கம்போல் பருத்திப்பட்டு பசுமைப் பூங்கா பகுதியில் ஆவடி மாநகராட்சி சார்பில் இன்று சிற்றுண்டி வழங்கப்பட்டது. அப்போது, பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சாம்பாரில் உயிரிழந்த நிலையில் பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு, உணவருந்தி கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதற்குள்ளாகவே, அந்த உணவை உணவகம் மற்றும் விநியோக இடத்திலேயே பல ஊழியர்கள் உட்கொண்டிருந்ததால், உடனடியாக அவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்காக ஆவடி அரசு […]

