தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த தவறிவிட்ட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கின்ற திமுகவைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுகவினர் சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதோடு, ஒவ்வொரு பகுதியிலும் தலைமை கழக நிர்வாகிகள் […]

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நியமனம் செய்யப்பட்ட போலி பொதுக்குழு கலைக்கப்படுவதாக ஓ.பி.எஸ் அளித்துள்ளார். இது குறித்து ஓ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில்; அதிமுகவில் கழக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வகுத்த அடிப்படை விதிக்கு முற்றிலும் முரணாகவும், கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை அப்பதவியிலிருந்து இயற்கை நியதிக்கு புறம்பாக நீக்கியும், கழகத்தின் நிரந்தரப் பொதுச் […]

ஓபிஎஸ் அணி சார்பில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இது செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன்னுடைய […]

இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட உத்தரவு நிரந்தரம் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனையடுத்து கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கவும் […]

அதிமுகவின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ கூட உள்ளது. அதிமுகவின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ கூடுகிறது. அதிமுகவின்‌ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர்‌ நடக்கவிருக்கும்‌ முதல்‌ செயற்குழு கூட்டம்‌ என்பதால்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே கடந்த ஏப்ரல்‌ 7-ம்‌ தேதி செயற்குழு அறிவிக்கப்பட்டு பின்னர்‌ அது ரத்து செய்யப்பட்டது. மோடியின்‌ வருகையை காரணம்‌ காட்டி செயற்குழு […]

அதிமுகவின் பொதுச்செயலாளர் தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்ப இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பிஎஸ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது; அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை சட்டவிரோதமாக அறிவித்துள்ளனர். கடந்த வருடம் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. […]

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் பிற மாநிலத் தொழிலாளர்கள் காலம் காலமாக பல்வேறு பணிகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு, தமிழ்நாட்டின் கட்டமைப்பிற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் இங்கு விரட்டி அடிக்கப்படுகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருப்பது வருத்தமளிக்கும் […]

நம்பிக்கைத் துரோகி எடப்பாடி பழனிசாமியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலுவின்மையில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில், அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது. இந்தத் […]

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வயது 96. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு காரணமா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஓபிஎஸ் தாயாரின் உடல் […]

அதிமுக சின்னத்தை முடக்க கோரி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் […]