இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முதன்மை தேர்வாளராக இருக்கும் அஜீத் அகர்கரின் ஒப்பந்தம் வரும் அக்டோபர் 4-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2027 உலகக்கோப்பை வரை தொடர்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்தபோதிலும், தனது பதவிக் காலத்தை நீட்டிக்க விருப்பமில்லை என்று அகர்கர் பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை மும்பையில் நடைபெற்ற பிசிசிஐயின் 95-வது ஆண்டறிக்கைக் கூட்டத்தில் (AGM) அகர்கரின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து […]

