‘விநாயகர்’ என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்’ அல்லது ‘மேலான தலைவர்’ என்பது பொருளாகும். எந்தவொரு சுப காரியத்தையும் தடையின்றி முடித்துக் கொடுக்கும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த நன்னாளே ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் ‘விநாயகர் சதுர்த்தி’யாக நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புராணங்களின்படி, பார்வதி தேவி நீராடச் செல்லும் போது தன் மேனி சந்தனப் பூச்சுகளால் ஒரு பாலகனை உருவாக்கி, அதற்கு உயிரூட்டிக் காவலுக்கு […]