திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு, திருமலையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலிஃபிளவர் சார்ந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. சமீபத்தில் உணவகங்களுக்குக் கொண்டுவரப்பட்ட காலிஃபிளவர்களில் புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் எவ்வித சுகாதாரக் குறைபாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கோபி மஞ்சூரியன், […]

