நமது கைகளிலும் சரி, கால்களிலும் சரி ஆபரணம் அணிவதற்கு என்றே சில வரைமுறைகள் நம் பெரியோர்கள் வகுத்து வைத்துள்ளனர். இதற்கு பின்னால் சில அறிவியல் காரணங்களும் உள்ளன. கை, கால் இரண்டிலும் உள்ள இரண்டாவது விரலில் தான் ஆபரணம் அணிய வேண்டும் என சொல்லி உள்ளார்கள். கையில் மோதிரம் அணிவதாக இருந்தாலும், காலில் மெட்டி அணிவதாக இருந்தாலும் இரண்டாவது விரலை தான் சொல்லி உள்ளார்கள். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் […]

உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம். நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: அன்ன தானம் கடன் தொல்லைகள் நீங்கும் அரிசி தானம் முன்ஜென்ம பாவங்கள் விலகும் […]

மஞ்சட்டி என்ற பொருள் அனைத்து வகையான ஹார்மோன் மாற்றங்களுக்கும் மருந்தாக அமைந்திருக்கிறது. இது பிசிஓடியால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு, மஞ்சட்டி என்பதனை உட்கொண்டால் இரத்தத்தை சுத்திகரித்து மற்றும் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.  இதன் மூலம் ஹார்மோன் உற்பத்தி ஆகுவதும் சீராக இருக்க உதவுகிறது. பாலிசிஸ்டிக் கருப்பைக் கோளாறு என்ற ஒன்று பெண்களிடையே பொதுவாக காணப்படும் பிரச்சனையாக இந்த நாட்களில் உள்ளது. பெண்களிடையே உடலின் கருப்பையின் ஒழுங்கற்ற செயல்பாட்டை உள்ளடக்கியதால் சில […]

செம்பருத்தி செடியில் இருக்கும் பூ, இலை என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள ஒன்றாக இருக்கிறது. செம்பருத்தி செடியில் இருக்கும் பூவை எவ்வாறு பயன்படுத்தி வருவதனால் என்னென்ன மருத்துவ குணங்கள் முழுமையாக கிடைக்கும் என்று இந்த பதிவில் காணலாம். செம்பருத்தி பூவினை எடுத்து அதனை தண்ணீரில் நன்கு அலசி கொள்ள வேண்டும். பூவின் நடுவில் உள்ள மகரந்தத்தை மட்டும் நீக்கிவிட்டு அதன் இதழ்களை காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு […]

நம் நாட்டில் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை மூத்த குடிமக்கள் எனக் கணக்கீடு செய்துள்ளனர். அதேப் போல் அவர்களின் சராசரி வயது படிப்படியாக அதிகரித்து வரும் சூழலில், மூத்த குடிமக்களின் சவால்களும் அதிகரித்து வருகின்றன. அவர்களின் நிதிப் பிரச்சனைகளை மனதில் கொண்டு, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், அவர்கள் உத்தரவாதமான வருமானத்தை பெறுவது மட்டும் அல்லாமல் அவர்களின் […]

மஞ்சள் மனித உடலில் பல நன்மை பயக்கும் ஒரு மசாலாப் பொருள். இது தொற்றுநோய்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு பயன்படுகின்றது. மேலும் அதன் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் அமைந்துள்ளது.  ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக்கொள்வதை பல மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மஞ்சள் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு மசாலாப் பொருள். இது இரத்த […]

பச்சை தக்காளி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். தக்காளி இல்லாமல் சமைப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. சுவை மற்றும் ஆரோக்கிய நலன்களுக்காக தக்காளி குழம்பில் சேர்க்கப்படுகிறது. சிவப்பு தக்காளியைப் போலவே பச்சை தக்காளியும் சுவையானது. அவை இரண்டிலும் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம், பொட்டாசியம், புரதம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. பச்சை தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ […]

குளிர் காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே தாகம் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் குடிக்கும் அந்த ஆசையை தூண்டும். எனவே அதில் ஏலக்காய் சேர்க்கவும். இந்த ஏலக்காய் சுவை நம்மை அடிக்கடி தண்ணீர் குடிக்க தூண்டும் உங்களுக்கு சுருக்கங்கள் வராது. இந்த நீரின் நன்மைகளையும் பார்க்கலாம். இந்த ஏலக்காய் நீரை குடித்து வருவதால் அடிக்கடி வரும் இருமல் […]

வலிப்பு என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான நோயாகும். இது தீவிரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும். அத்துடன் சரியான மருத்துவத்தை எடுத்து கொள்ள வேண்டும்.  வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் எனவும், கர்ப்பிணிகள் வலிப்பு வந்தால் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும் இல்லையெனில் பக்கவிளைவுகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதில் எந்த தடையும் இல்லை […]

பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் அதிக அளவில் ஏற்படும் ரத்த போக்கினால் உடல் விரைவில் சோர்வடைந்து விடும். இதனால் அவர்களுக்கு மீண்டும் ஊட்ட சத்துக்களை அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்காக தான் பேரீச்சம்பழம் உதவுகிறது. இது பெண்களுக்கு ரத்த சோகை பிரச்சினையில்லாமல் இருக்க பெரிதும் பயன்படுகிறது.  3 பேரீச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு அதனுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் […]