பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில் உள்ள ஃபதேபூர் காவல் நிலைய எல்லைக்குள், கிராம மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ஜூராங் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர யாதவ், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் தாய்க்கு மருத்துவ உதவி வழங்கினார். இதனை விரும்பாத கிராம மக்கள் மருத்துவரை மரத்தில் கட்டி வைத்து கொடூரமான முறையில் ரத்தம் சொட்ட தாக்குதல் நடத்தியுள்ளனர். […]