கிருஷ்ணர் வேடமணிந்து மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவனின் உயிரை, அவன் அணிந்திருந்த முத்து மாலையே பறித்த சோகம் பீகாரில் நடந்துள்ளது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாக மாலையின் மணி தொண்டையில் சிக்கியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் கூச்செஸ் வட்டாரத்துக்கு உட்பட்ட பகீரத் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஆர்யன், கிருஷ்ணர் […]