உடன் டியூஷன் படிக்கும் மாணவர்களுடன் சுற்றுலா சென்ற 15 வயது சிறுவனுக்கு, பாலியல் வன்புணர்வு நடந்துள்ளது. இந்தக் கொடுஞ்செயலை செய்த அந்த சிறுவனது நண்பர்கள், இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27, 2023 அன்று, தான் படிக்கும் டியூஷன் சென்டரில் உள்ள நண்பர்களுடன், 15 வயது சிறுவன் கேரளாவில் உள்ள மறையூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் அங்கு தனியாக ரிசார்ட் […]

இங்கிலாந்து நாட்டில் ப்ரோம்ஸ்கிரோவ் கிளப் அணிக்காக ஆலிவர் ஒயிட்ஹவுஸ் என்ற 12 வயது வீரர் கிரிக்கெட் ஆடி வருகிறார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி குக்ஹில் அணிக்கு எதிராக நடந்த 12 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் ஆலிவர் ஒயிட்ஹவுஸ் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் ஒரு அபாரமான சாதனையை நிகழ்த்தினார். ஆலிவர் வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரட்டை ஹாட்ரிக் சாதனை படைத்தார். […]

கேரளாவின் அரபி பாடசாலையில் மாணவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்திய மதரசா ஆசிரியருக்கு 67 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது அதிவிரைவு நீதிமன்றம். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சொர்ப்புள சேரி என்ற பகுதியை சார்ந்தவர் ரஷீத் வயது 49. இவர் அங்குள்ள அரபி பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி இவரிடம் கல்வி பயிலும் மாணவன் […]

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சிகூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சத்தியா என்னும் மனைவியும் சுதர்சன் என்ற ஐந்து வயது மகனும் இருந்துள்ளனர். சென்னை தனியார் நிறுவனம் ஒன்றில் கோவிந்தராஜ் வேலை பார்த்து வந்த நிலையில், மகனுடன் சத்யா தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அனுக்கூர் குடிகாடு பகுதியில் இருக்கும் தனது தந்தை வீட்டிற்கு அவர் மகனுடன் சென்றுள்ளார். நேற்று காலை 10 […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி படித்து வந்த தஞ்சையைச் சார்ந்த மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்த மாணவர் சுமித்ரன் (20). இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆலம்பள்ளம். இவர் இந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து இருந்தார். கடந்த சில நாட்களாகவே சுமித்ரன் […]

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இளைஞர்கள் சேர்ந்து 14 வயது சிறுவனை கொன்ற சம்பவம் தலைநகர் தில்லியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் கடந்த 22 ஆம் தேதி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை மீட்டனர். பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் இறந்து போன சிறுவன் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர. கடந்த ஜனவரி 19ஆம் தேதி […]

குஜராத் மாநில பகுதியில் உள்ள வல்சாத் வாபி நகருக்கு அருகில் கால்வாயில் சிறுவன் ஒருவனின் உடல் சிதைந்து பயங்கரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. சடலமாக கிடந்த சிறுவன் சைலி என்ற கிராமத்தை சேர்ந்தவன் என்றும் இவர் டிசம்பர் 29ம் தேதி சிறுவன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் “பணக்காரன் ஆகவேண்டும்” என்று சிலர் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் சிறுவன் பலி கொடுக்கப்பட்டிருப்பாடன் என்று […]

புதுச்சேரி ஒன்றியம் முத்தியால்பேட்டை கணேஷ் நகர் 3வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் தசரதன். கட்டிட தொழிலாளியான இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சக்திமுருகன், பாலமுருகன் என இரு மகன்கள் உள்ளனர். சக்தி முருகன் காரைக்கால் நவோதயா பள்ளியிலும், இரண்டாவது மகன் பாலமுருகன் (14) தனியார் பள்ளியில் 9ம் வகுப்பும் படித்து வந்தனர். புதுவை வேல் சொக்கநாதன் திருமண மண்டபம் அருகே உள்ள டியூசன் சென்டரில் […]

சேலம் மாவட்ட பகுதியில் குடிபோதையில் 72 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வீராணம் அருகே எம்.பாலப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி( 72) . இவர், நேற்று மதியம், 2:45 மணியளவில் அதே பகுதியில், வயக்காட்டில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது பாரில் 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் போதையில் மூதாட்டி லட்சுமியை […]

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – பானுமதி தம்பதிக்கு தரணி என்ற 8 வயதில் மகன் உள்ளார். தரணி தற்போது விடுமுறைக்காக தனது பாட்டியை பார்க்க வந்துள்ளார். தரணி மற்றும் அவரது தாய் பானுமதி மற்றும் அவரது பாட்டி ஆகியோர் புதன்கிழமை தங்கள் கிராமத்திற்குத் திரும்புவதற்காக களந்திர கிராமத்தை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையின் எதிர் திசையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றனர். அவர்கள் சாலையைக் […]