மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ‘மிகவும் துயரமானது’ மற்றும் ‘வருத்தமளிப்பது’ என்று குறிப்பிட்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் […]
breaking news
அண்டை நாடான வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில், மற்றொரு இந்து இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் சுனாம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பங்கதோஹர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜாய் மகாபத்ரோ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை அன்று நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஜாய் ஒரு உள்ளூர் கடைக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் ஒரு உள்ளூர்வாசியால் தாக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கூறினர். ஜாய் சில்ஹெட் […]
ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு மோதல்களில், உயர்மட்ட மாவோயிஸ்ட் தளபதி கணேஷ் உய்கே உட்பட குறைந்தது 6 நக்ஸலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் மோதல் புதன்கிழமை இரவு பெல்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கும்மா காட்டில் ஏற்பட்டது, இதில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டாவது மோதல் வியாழக்கிழமை காலை சக்கபட் காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு […]
Eight elephants were killed in a train derailment accident involving the Rajdhani Express in Assam.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், தேசிய ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த புகாரை டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த புகார் ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று […]
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பர் 4-5 தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா – ரஷ்யா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டிற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்காகவும் புடின் இந்தியா வருவார் என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு […]
2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலை விட்டு விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள “நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன், என் குடும்பத்தை நான் துறக்கிறேன்… இதைத்தான் சஞ்சய் யாதவும் ரமீஸ்வும் என்னிடம் கேட்டார்கள் … மேலும் நான் எல்லா பழிகளையும் […]
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை இணைக்கும் தீவிரவாத வலையமைப்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில் இந்த தீவிரவாத நெட்வொர்க்கில் சந்தேகமான தொடர்புக்காக லக்னோவை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். இன்று தவுஜ் கிராமத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் 360 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட […]
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சனிக்கிழமை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், இந்த கூட்டத்டொடர் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் “நல்ல பயனுள்ள” ஒன்றாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் “இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று, 2025 ஆம் […]
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுகாவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.. ஏகாதசி பண்டிகையின் போது கோயிலில் ஏராளமானோர் கூடியிருந்ததால், வளாகத்திற்குள் கூட்டம் அதிகமாகி, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் தற்போது […]

