அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், இந்த ஒப்பந்தம் சர்வதேச வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்தை ஊக்குவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே எட்டப்பட்ட […]

அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் இன்று நிகழ்ந்த AN-32 விமான விபத்தில் ஐந்து விமானப்படை வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் “ அசாமில் உள்ள ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் AN-32 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் ஐந்து இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். துணை விமானி உயிர் பிழைத்துள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விமானப்படை விசாரணைக்கு […]

அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே, இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான விமானம் AN-32 வகையைச் சேர்ந்தது என்றும், அது ரோரியா (Rowriah) விமானப்படை தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. AN-32 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், மேல் அசாமில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த விமானப்படைத் தளத்திற்கு அருகிலேயே விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான அந்த […]

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்த நிலநடுக்கம் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.. 4 பேர் காயமடைந்தனர் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.37 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் மையம் புரியாஸிலிருந்து 24.7 கிமீ மேற்கு-தென்மேற்கில் இருந்தது. இது மின்டானோ தீவில் இருந்து […]

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சோனார்பூருக்கு, தேர்தல் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி சென்றிருந்தார்.. அப்போது அவர் மீது, சிலர் தாக்குதல் நடத்தி, அவரை வலுக்கட்டாயமாகத் தள்ளியதாகக் கூறப்படுகிறது. டயமண்ட் ஹார்பர் தொகுதியின் மக்களவை உறுப்பினரான பானர்ஜி மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. மேலும், சிலர் அந்தத் திரிணாமுல் தலைவர் மீது […]