வன்முறைக் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து தொலைக்காட்சி மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்துடன் வெளியிட வேண்டுமென அனைத்து தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகளில் இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து கண்காணித்ததையடுத்து தொலைக்காட்சிளுக்கு தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. தனிநபர்களின் இறந்த உடல்கள் […]