வங்கதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் உள்ளன. டாக்காவில் நிலவும் அமைதியின்மையைப் பயன்படுத்தி, வங்கதேச வழித்தடம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானிய அமைப்புகளிடமிருந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. […]