பெட்ரோல், டீசல், CNG, LPG, LNG மற்றும் ஹைட்ரஜன் ஆகிய எரிபொருட்கள் தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இந்த ஐந்து வகையான எரிபொருட்களின் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளுக்கு இனிமேல் எவ்விதச் சலுகையும் வழங்கப்படாது. ஏனெனில் இவற்றை வழங்கும் இயந்திரங்களின் சோதனை மற்றும் மறுசோதனைகள் அனைத்தும் GATC அமைப்பில் பதிவு செய்யப்படும். மத்திய அரசு இந்த இயந்திரங்களை, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களின் வரம்பிற்குள் கொண்டு வந்துள்ளது. […]