உலக அளவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்க தயாராக உள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நீரிழிவு இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற 3 நாள் உலக நீரிழிவு மாநாட்டில் பேசிய அவர், பல தலைமுறைகளாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் டைப் 2 நீரிழிவு நோயை பெற்றுள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சுகாதாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருவதாக […]

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 11,000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை […]

இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழுவால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் குறிவைக்கப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு நிறுவனமான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது… சைபர் தாக்குதல்கள் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த ஹேக்கர் குழு அரசாங்கத்தின் முக்கியமான பிரிவுகளை குறிவைத்து வருவதாக எச்சரித்துள்ளது. இதனால் சுமார் 12,000 அரசு இணையதளங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த வகையான தாக்குதல்கள் கணினிகளை […]

அத்தியாவசிய மருந்துகள் தொடர்பாக தொழில்துறையினருக்கான உரிமம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்ற அங்கீகாரங்களை முறைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்த ஒருங்கிணைந்த இணையதளம் எளிதாக்கும். மத்திய போதைப்பொருள் பிரிவின் இந்த ஒருங்கிணைந்த தளம் மருந்துத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மருந்து மற்றும் ரசாயனத்துறையின் சேவையைப் பூர்த்தி செய்தல் ஆகிய நோக்கங்களைக்கொண்டு வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும். முதலாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அத்தியாவசிய மயக்க மருந்துகள் கிடைப்பதையும் இது உறுதி செய்யும்.போதை மருந்துகள் […]

கோடை காலத்தை முன்னிட்டு நெரிசலை சமாளிக்க 217 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ஆண்டு கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கவும், 217 சிறப்பு ரயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்திற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ரயில்வே வழித்தடங்களில் நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைத்து சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 69 சிறப்பு ரயில்களும், தென் மத்திய ரயில்வேயில் 48 சிறப்பு ரயில்களும், […]

கொரோனா பரவல் அதிகரிப்புக்கு மத்தியில், ஹரியானா மாநில அரசு, பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம் என்று அறிவித்துள்ளது.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000, 3000 என உயர்ந்து வந்த நிலையில் தற்போது 5000-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. […]

தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) 2020 ஆம் ஆண்டில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை (NSA) அறிமுகப்படுத்தியது. இது புதுமையான தயாரிப்புகளை உருவாக்கி சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வெளிப்படுத்தும் ஸ்டார்ட்அப் சூழலில் சிறந்த ஸ்டார்ட்அப்கள் மற்றும் செயல்படுத்துபவர்களுக்கு வெகுமதியோடு அங்கீகாரம் அளிக்கிறது. இதுவரை மூன்று முறை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்திய ஸ்டார்ட்அப் சூழல் அமைப்பின் வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்டார்ட்அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசிய […]

பிரதமர் முத்ரா யோஜனா திட்டம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதியன்று, கார்ப்பரேட் அல்லாத, பண்ணை சாரா சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் வருமானம் ஈட்டும் வகையில், ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் எளிதாக கடன் வழங்கும் நோக்கத்துடன் பிரதமர் திரு.நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், மைக்ரோ நிதி நிறுவனங்கள் மற்றும் இதர நிதி இடைத்தரகு நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. அனைவரையும் […]

ஏப்ரல் 10, 11 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும். அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாடினார். கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்” […]