புதிய வருமான வரி விதிப்பு முறையின் கீழ் ரூபாய் 7 லட்சத்துக்கு சற்று கூடுதலாக வருவாய் பெரும் நபர்களுக்கு சாதகமாக மத்திய அரசின் நிதி மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 64 திருத்தங்களுடன் நிதி மசோதா 2023 மக்களவையில் எந்த விவாதமும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக உள்ள இந்த புதிய வருமான விதிப்பு நடைமுறையின் கீழ் 7 லட்சம் வரை […]
central govt
பிஎம் மித்ரா பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல். பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இவை அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் விருதுநகர், தெலங்கானாவில் வாராங்கல், குஜராத்தில் நவ்சாரி என்ற பகுதியிலும், கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியிலும், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ […]
பொதுமக்கள் வரும் மார்ச் 31க்கு பிறகு, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வாங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. ஹால்மார்க்கிங் என்பது தங்கத்தின் தூய்மையை உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறையாகும். தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் தூய்மையை மதிப்பிடுவதற்கு, இந்திய தரநிலைகளின் பணியகத்தின் (BIS) ஹால்மார்க் முறையை இந்தியா பயன்படுத்துகிறது. கடந்த 2021 ஜுன் 16 முதல் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவற்றுக்கு கட்டாய ஹால்மார்க்கிங் முறையை மத்திய அரசு […]
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வழங்க மத்திய அரசு ஒப்புதல். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையை 01.01.2023 முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் தவணையானது விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில் அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 38% ஐ விட 4% அதிகமாகும். அகவிலைப்படி மற்றும் அகவிலை […]
14 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் சார்பில் பட்டியலிடப்பட்ட 6 சிறுபான்மையின சமூகத்தைச்சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிப்புத்திட்டம் ( SEEKHO AUR KAMAO SCHEME) அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 14 முதல் 45 வயதுக்குட்பட்ட சிறுபான்மையினத்தவர்களுக்கு அவர்களது தகுதிகளுக்கேற்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். சிறுபான்மையின மக்களை சுய […]
அரசியல் சாசனத்தின் 348(1)(ஏ)பிரிவு உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 348-வது சட்டப்பிரிவின் 2-வது பிரிவின் உட்பிரிவு (ஏ) பிரிவு (1)-ல், உயர்நீதி மன்றங்களின் நடவடிக்கைகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில மொழிகளில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநில […]
வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இதில் வரி செலுத்துவோர் AIS for Taxpayer என்ற செயலியை கூகுல் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோர்களில் இலவசமாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். வரி பிடித்தம், வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரித்தொகை, வருமான வரி திரும்ப பெறுதல் மற்றும் இதர தகவல்களை […]
சுங்கக் கட்டணத்தை வருடந்தோறும் உயர்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்து வருகின்ற 01.04.2023 அன்று, காலை 11.00 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் அதிக அளவில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நீண்ட காலமாக அதிக அளவிலான அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் […]
ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது கடந்த 01.08.2022 முதல் தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில், வாக்காளர்கள் எவரேனும் தங்களது அதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் நாளது வரை இணைக்காமல் இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் […]
தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் வழங்கும் சங்கங்கள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம்,மீன்வளத்துறை, மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் மூலம் மக்களுக்கான அரசின் சேவைகளை, அவர்களின் […]