பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் (பிசி, எம்பிசி, டிஎன்சி) பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டம் (‘யசஸ்வி’) மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. 2025- 26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகை […]

மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்தியப் புள்ளியியல் கழக மசோதா, 2025-ன் வரைவைப் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்காக வெளியிட்டுள்ளது. முன்-சட்டமியற்றும் கலந்தாய்வு செயல்முறையின் ஒரு பகுதியாக அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளும் ஆலோசனைகளும் வழங்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தியப் புள்ளியியல் கழகம் டிசம்பர் 1931-ல் நிறுவப்பட்டது. அன்று முதல், இது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்கக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. 2020-ல் டாக்டர் ஆர்.ஏ. […]

குறைவான எடையுடன் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளின் இறப்பைத் தடுக்க பிசிஜி தடுப்பூசி அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பச்சிளங்குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 1000 குழந்தைகளுக்கு 24.9 என்ற அளவில் உள்ளது. இது வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள விகிதத்தைக் காட்டிலும் அதிகமானதாகும். பச்சிளங்குழந்தைகளின் இறப்பிற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக குறை மாதத்தில் பிறப்பது அதாவது 37 வாரங்கள் முடிவடைவதற்குள் பிறக்கும் குழந்தைகள், இரண்டாவதாக பாக்டீரியா கிருமிகள் மூலம் […]

கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனத்தில் பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கான உற்பத்தியுடன் கூடிய பணப்பலன் அறிவித்துள்ளது மத்திய அரசு. நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இல்லாத பிற பணியாளர்களுக்கு உற்பத்தியுடன் கூடிய பணப்பலனாக 1,03,000 ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. நிலக்கரி தொழில்துறைக்கான நிலைக்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் கோல் இந்தியா நிறுவனத்தில் […]

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு 2025 செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய […]

தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. இணையதளம் மூலம் இந்த விண்ணப்பங்களை 24.10.2025 வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பொறுப்புக்கு பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவால் ஆய்வு செய்யப்படும். தகுதி, அனுபவம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வுக்குழு இறுதி தேர்வை மேற்கொள்ளும். […]

மத்திய அரசுப் பணியாளர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர்வதற்கான ஏ-2 படிவத்தை நேரடியாக சமர்ப்பிக்கலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய அரசு சாராத நிறுவனங்களில் தற்காலிக பணி நிமித்தமாகவோ அல்லது வெளிநாட்டு சேவைக்காகவோ பணி புரிந்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாத பட்சத்தில், படிவம் ஏ-2-வை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மத்திய அரசு நிறுவனத்தின் துறை சார்ந்த அதிகாரிகளிடம் […]

தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை தேர்தல் ஆணையம் மேலும் எளிமைப்படுத்த திட்டமிட்டுள்ளது. தேர்தல் நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மேம்படுத்தவும் தேர்தல் ஆணையம் கடந்த ஆறு மாதங்களில் 29 முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தாமதங்களை குறைக்கும் வகையில் 30-வது முன் முயற்சியாக தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறையை மேலும் எளிமைப்படுத்தும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது எடுத்துள்ளது. இதன்படி வாக்குகளை எண்ணும் பணி 2 பிரிவுகளைக் கொண்டதாகும். தபால் வாக்குகளை எண்ணுதல் மற்றும் மின்னணு […]

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில்; சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17-ல் தொடங்கி மார்ச் 9-ம் தேதி முடிவடையும். அதேபோல், 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடையும். இதுதவிர தேசிய கல்விக் கொள்கையின்படி பத்தாம் வகுப்புக்கு மட்டும் நடப்பாண்டு முதல் இரு பொதுத்தேர்வுகள் […]