பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை 2025 டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீடித்துள்ளது. இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி அதிக அளவு கிடைப்பதற்காக பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு 2025 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 30 வரை தற்காலிகமாக விலக்கு அளித்திருந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதலாக ஆதரவு அளிக்க தற்போது 2025 செப்டம்பர் 30 முதல் டிசம்பர் 31 வரை பருத்தி மீதான (எச் எஸ் 5201) […]
central govt
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து 79 மற்றும் ராஷ்ட்டீரிய ஜனதா தள் கட்சியிடமிருந்து 3 ஆட்சேபம் மற்றும் உரிமைக் கோரல் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி […]
பிரதமரின் ஸ்வநிதி திட்ட மறுசீரமைப்பு மற்றும் கடன் கால நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு பிரதமரின் சாலையோர வியாபாரிகள் தற்சார்பு நிதித் (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தில், 31.12.2024-க்குப் பிறகும் கடன் காலத்தை மறுசீரமைத்து 2030 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 7,332 கோடி ரூபாய். மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டம் 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட 1.15 […]
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ”கேட்” நுழைவுத் தேர்வுக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. […]
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை நகர்ப்புறம் மற்றும் மும்பை புறநகர் பகுதிகள் தானே, ராய்கட் மற்றும் பால்கர் மாவட்டங்களில் ஜிஎஸ்டிஆர்-3-பி படிவம் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இம்மாதம் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய மறைமுகம் மற்றும் சுங்கவரி வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மும்பையில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் ஜூலை மாதத்திற்கான […]
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையை அடுத்த பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். பின்னர் மாநில மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்தும், ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 20 காலை 11.00 மணி வரை எந்த அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, ஒரு உரிமை கோரல் கூட வரவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகளுக்கு 1,60,813 வாக்குச் சாவடி நிலையிலான […]
510 அலைவரிசைகள் தற்போது இலவச டிடிஎச் சேவையில் கிடைக்கின்றன என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார் 2019-ல் இலவச டிடிஎச் சேவையில் 104- ஆக இருந்த அலைவரிசைகள் தற்போது 510 அலைவரிசைகளாக அதிகரித்துள்ளன என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த அவர்; இவற்றில் 92 தனியார் அலைவரிசைகளும், 50 தூர் தர்ஷன் […]
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி. தற்கொலைகளும், குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதற்கும் முடிவு கட்டப்படும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சூதாட்டங்கள் மற்றும் பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தை […]
பச்சிளங் குழந்தைகளின் பிறவியிலேயே ஏற்படும் பாத குறைபாடுகளுக்கான மருத்துவப் பயிற்சி ஜிப்மர் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக்கால பாத நோயான கிளப்-ஃபூட் உலக அளவில் ஆயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படுகிறது. இந்த வகை குறைபாடுகளுக்கு முதன்மை மருத்துவ சிகிச்சையான “பொன்செட்டி முறை” ஆகும். இந்த முறையில் அறுவைச் சிகிச்சை ஏதுமின்றி பிளாஸ்டர் போடுவதன் மூலம், மேற்கொள்ளப்படும் சிகிச்சை பச்சிளங்குழந்தைகளின் பாதங்களை 6 முதல் 7 வாரகாலத்தில் […]

