நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்ட 4 பேரும் சிக்னல் செயலி மூலம் தொடர்பில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி அவைக்குள் நுழைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியான துரிதமாக […]

மக்கள் உண்பதற்கான தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது. அரசு சாரா நிறுவனங்கள் அதைச் செய்வது சரியல்ல என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்; மக்கள் உண்பதற்கான தரமான உணவு எது என்று சான்றளிக்கும் அதிகாரம் அரசிடமே உள்ளது. அரசு சாரா நிறுவனங்கள் அதைச் செய்வது சரியல்ல. உணவின் தரத்தை சோதனை […]

கடந்த ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தியதில் இருந்து ரூ.4.27 கோடியை தமிழக அரசு மிச்சப்படுத்தி இருக்கலாம் என சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்தில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துவதால் எந்த பலனும் இல்லை. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் இருந்திருந்தால் ரூ.4.27 கோடியை தமிழக அரசு மிச்சப்படுத்தி இருக்கலாம் என இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹார்டுவேர் […]

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் விதிகள், 1994 ஐ திருத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் மல்டி சிஸ்டம் ஆபரேட்டர் (எம்.எஸ்.ஓ) பதிவுகளை புதுப்பிப்பதற்கான நடைமுறையை அறிமுகப்படுத்தியது. மேலும், கேபிள் ஆபரேட்டர்கள் பிராட்பேண்ட் சேவை வழங்குநர்களுடன் உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எம்.எஸ்.ஓக்கள் பதிவுக்கும், பதிவை புதுப்பிக்க மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக ஒளிபரப்பு சேவா போர்ட்டலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.எம்.எஸ்.ஓ […]

75 ஆண்டுகால நாடாளுமன்றப் பயணம் குறித்த விவாதம் இன்று தொடங்குகிறது. ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் 4 முக்கிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமரால் பரிந்துரைக்கப்படும் கேபினட் அமைச்சரை இந்திய தலைமை நீதிபதிக்கு மாற்றுவது உட்பட நான்கு மசோதாக்கள் அமர்வின் போது எடுத்துக் கொள்ளப்படும். மத்திய அரசு ஆகஸ்ட் […]

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் சிலிண்டரின் மானியம் ரூ 200 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்ததை அடுத்து, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் சமையல் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 மானியத்தை அரசாங்கம் வெள்ளிக்கிழமை நீட்டித்தது. இந்த நடவடிக்கையால் 9.6 கோடி குடும்பங்கள் பயன்பெறும். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, PMUY இன் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு […]

விதிமுறைகளை குற்றமற்றதாக்கும் வகையில், கனிமச் சலுகை விதிகள் 1960-ல் மத்திய நிலக்கரி அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.அரசின் கொள்கையின்படி, எளிதாக வர்த்தகம் செய்வதை மேலும், ஊக்கப்படுத்துவதற்காக 68 விதிமுறைகளை குற்றமற்றதாக்கி திருத்தம் செய்துள்ளது. 10 விதிமுறைகளுக்கு அபராதமும் குறைக்கப்பட்டுள்ளது. தாமதமான வாடகைக் கட்டணம், ராயல்டி, கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகைக்கான வட்டி 24 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் நிலக்கரி சுரங்கத்துறையில் தேவையான பொருளாதார தளர்வுகளை ஏற்படுத்தும் […]

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் சேவை கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் மீறல் தொடர்பாக விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள […]