சென்னை ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் வள்ளி வேலன் நகரை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (32). பிரபல ரவுடியான இவர் தற்சமயம் பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார், இவருக்கு திருமணம் நடந்து குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு யோகேஸ்வரன் வேலைகள் முடிந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று யோகேஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்து அவரை […]
Chennai
சென்னை வடபழனியைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது நிஷாந்த் என்ற இளைஞர் உடன் நட்பாக பழகி வந்தார். இந்த நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையில் காதலாக மாறியது. கல்லூரியில் சேர்ந்த பின்னரும் கூட இவர்களுடைய காதல் தொடர்ந்து வந்தது. திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பல முறை அந்த இளம் பெண்ணை நிஷாந்த் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு கொஞ்சம், […]
தனது பெற்றோர்களிடமிருந்து குழந்தையை மறைக்க பெற்ற மகனையே கொலை செய்த கொடூர தந்தையை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள பெரியார் நகரை சார்ந்தவர் வருண். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்தார். காதலிக்கும் போது இருவரும் நெருங்கி பழகியதில் விஜயலட்சுமி கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமியின் பெற்றோர் அவரை வருணுக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்தத் திருமணம் வருண் குடும்பத்தாருக்கு தெரியாது. இந்நிலையில் […]
சென்னை தாம்பரத்தை அடுத்த மாதம்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து அதில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக போதை தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் காவல்துறையினர் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாதம்பாக்கத்தில் ஒரு வீட்டுக்குள் கஞ்சா செடி வளர்த்து அதிலிருந்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த […]
சென்னையில் அதிகமாக காய்ச்சல் பரவிவரும் நிலையில், 50% பேருக்கு இன்ஃப்ளூயன்ஸா – ஏ வகை வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பரவலாக காய்ச்சல், இருமல் என்பது பரவி வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிகின்றன. தொடந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் பரவி வந்த காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இது குறித்து ஆய்வு ஒன்றை பொதுசுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டது. அதன்படி, […]
ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்த சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு விமான நிலையத்தில் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு 16வது இந்தியன் பிரீமியர் லீக் சீசன் வரும் 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28ம் தேதிவரை நடைபெறவுள்ளது. 10 அணிகள் பங்கேற்க உள்ள ஐபிஎல் போட்டியில், மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை – […]
கடந்த 2014 ஆம் வருடம் விபச்சார தடுப்பு வழக்கில் மீட்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவரை சென்னை பெரவள்ளூரில் இருக்கின்ற தனியார் காப்பகத்தில் காவல்துறையினர் சேர்த்தனர். அப்போது மற்றொரு விபச்சார வழக்கில் சிக்கிய பாத்திமா மூசா( 28) என்ற பெண்ணும் அந்த காப்பகத்தின் தங்கி இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் சிறுமிக்கு ஒரு நல்ல இடத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து, அந்த காப்பகத்தில் இருந்து சிறுமியை கடத்திச் சென்ற […]
மத்திய அரசு பணியாளா் தேர்வு ஆணையம் ( எஸ்.எஸ்.சி.) நடத்தும் 2023- ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணைhttps://ssc.nic.in/ என்ற அதிகாரபூா்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 11,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இத்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மூன்று முறைகளில் நடைபெற உள்ள இத்தேர்வில் வெற்றி பெற்றவா்களுக்கு தொடக்க கால மாத ஊதியம் ரூ.18,000 முதல் ரூ.22,000 வரை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான பயிற்சியை தாட்கோ நிறுவனம், ‘வராண்டா ரேஸ்’ என்ற தனியாா் […]
சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் மாமுல் கேட்ட ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் சக்திவேல்(23), கரி முல்லா(19) உள்ளிட்ட ஏழு நபர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரபல ரவுடி சண்முகம் மற்றும் அவரது கூட்டாளிகள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நபர்களிடம் பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் தர மறுத்ததால் இரு தரப்புக்கும் […]
விமான நிலையங்களில் தங்கம், எலக்ட்ரானிக்ஸ், சாதனங்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்காகவே சுங்கத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு விமான தரையிறக்கத்தின் போதும் அதில் வரும் பயணிகளிடம் தீவிரமாக சோதனைகளை செய்து வருகின்றனர். சென்னை மீனம்பாக்கம் சர்வதேசிய விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து வந்த ஒரு நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் […]