வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரவு முதல் இடி, மின்னலுடன் தொடரும் மழை சென்னையின் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், கிண்டி, சைதை, அசோக்நகர், மத்திய கைலாஷ், […]

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வுமையம் தற்போது தெரிவித்து உள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, தேனி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, […]

சென்னையில் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிட்டனர். மழையின் அளவு குறைவானதால் இன்று சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் […]

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டன இந்த நிலையில் வானிலை மையம் மழைக்கான எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வரும் 20-ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வளிமண்டல மேலடுக்கு […]

தென் தமிழக மாவட்டங்களில் 12-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 12-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான […]

தமிழக பகுதிகளில் நிலவி வரும் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால், இன்றைய தினம் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல நாளையும், நாளை மறுநாளும் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் பொதுவாக வறண்ட வானிலையே […]

மாண்டஸ் புயல் மழையின் காரணமாக கடந்த 9-ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், இன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அறிவித்துள்ளார். இது குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாண்டஸ் புயல் மழையின் காரணமாக 9-ம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து […]

ஏற்கனவே கடந்த வாரம் வங்க கடலில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக, கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் சில இடங்களில் பரவலாகவும், பல இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இதனால் பல பகுதிகளில் சேதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தான் கடந்த 9ம் தேதி நல்லிரவு 2 மணி அளவில் சென்னை, மாமல்லபுரம் அருகே இந்த மாண்டஸ் புயல் கரையை கடந்தது. ஆனாலும் கடந்த சில நாட்களாக […]

வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயலின் காரணமாக, பெய்த கனமழையால் தமிழகத்தில் பல்வேறு விதத்தில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.அந்த பாதிப்புகளை சரி செய்வதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியிருக்கிறது. என்னதான் பாதிப்புகளை சரி செய்வதாக மாநில அரசு தெரிவித்தாலும், இந்த மழையின் காரணமாக, பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரிகளின் நஷ்டத்தை மாநில அரசு ஈடுகட்டுமா என்பது சந்தேகம் தான். அந்த வகையில் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இந்த புயலின் தாக்கம் காரணமாக, […]

நேற்று முன்தினம் இரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக, தமிழ்நாட்டில் பல சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன.அதோடு தலைநகர் சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து சாலையில் குறுக்கே மரங்கள் முறிந்து விழுந்து கிடந்தனர். அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுப்பட்டு வந்தனர்.இதே போல தமிழ்நாடு முழுவதும் இந்த புயலின் தாக்கம் காரணமாக, பல்வேறு சேதங்கள் […]