நாட்டில் முதல் முறையாக மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதனால், 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு முன்கூட்டியே கிடைக்கும் என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் (RGI) தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக RGI மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் X தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். […]

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியதிலிருந்து இது 16 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். 2011 ஆம் ஆண்டு கடைசியாக நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு, 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை […]