முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று வாழ்க்கையில் ஏற்படும் சகல துன்பங்கள் மற்றும் கர்மவினைகளில் இருந்து விடுபட விநாயகர் சதுர்த்தி மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத வகையில், விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் செய்யப்பட்ட புதிய சிலையை வீட்டில் வைத்து பூஜித்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. களிமண் தண்ணீரில் கரைவது போல, நமது பாவங்களும் கர்மவினைகளும் கரைய வேண்டும் என்ற […]

