சேலம்‌ மாவட்டத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ மற்றும்‌ பெண்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி வருகின்ற 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்காடு பிரதான சாலையில்‌ அமைந்துள்ள சி.எஸ்‌.ஐ பல்வகை தொழில்நுட்பக்‌ கல்லூரி வளாகத்தில்‌ தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெறவுள்ளது. இம்முகாமில்‌ உற்பத்தி, […]

திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள குமுளூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் […]

அரியலூரில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஐனா (DDU-GKY) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை […]

இளம் பெண்களுக்கு தற்போது இருக்கின்ற சமுதாயத்தில் தன்னுடைய சொந்த வீட்டை தவிர்த்து வேறு எங்குமே பாதுகாப்பு கிடைப்பதில்லை. பெற்றோர்கள் நம்பிக்கையுடன் அவர்களை அனுப்புவது பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தான். ஆனால் அங்கேயும் ஒரு சில நபர்கள் செய்யும் செயலால் மாணவிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்கள். அந்த வகையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ உடற்பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக காவல்துறையில் […]

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் இருக்கக்கூடிய மலையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் கிரிசமுத்திரத்தில் இருக்கின்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்கள் இவர்கள் நாள்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இந்த சூழ்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் 8ம் வகுப்பு மாணவர்களான விஜய்(13), விஜய்(13), ரபிக்(13) உள்ளிட்ட மூவரும் மிதிவண்டியில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது வேலூரில் இருந்து ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் […]

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன் படி, இன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் […]

முதுகலை பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்க 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ளது செய்தி குறிப்பில், முதுகலைப் பொறியியல் படிப்புகளான எம்.இ., எம்.டெக்., எம்.பிளான் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான CEETA மற்றும், எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவு தேர்வுவிற்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கு கட்டணமாக […]

தேசிய தேர்வு முகமையின் (NTA) பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு CUET (UG) – 2023 அடிப்படையில் புதுவை பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விண்ணப்பப் தளம் 09.02.2023 முதல் திறக்கப்பட்டது. 2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை திட்டங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் CUET (UG) – 2023 க்கு https://cuet.samarth.ac.in என்ற இணையவழில் விண்ணப்பிக்கலாம். www.pondiuni.edu.in/admissions-2023-24/ என்ற முகவரியில் […]

விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் மனமுடைந்த மாணவி கல்லூரி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவை பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கவுண்டர் மில்ஸ் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து எந்த மாணவி ஸ்ரீ வர்ஷா. இவர் நேற்று தனது கல்லூரியில் அமைந்துள்ள கழிப்பறையில் சாணி பவுடர் என்ற விஷத்தை அருந்தி […]

திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி 60 இடங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் பாரதிய ஜனதா கட்சி இலவச ஸ்கூட்டி வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். செபஹிஜாலா மாவட்டத்தில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், “திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், கல்லூரி செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படும்… காங்கிரசுடன் கூட்டணி வைத்து தேர்தலுக்கு முன்பே, […]