ஜல்லிக்கட்டில்‌ கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள்‌ இன்று முதல் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியீட்டு விழா செய்தி குறிப்பில்; மதுரை மாவட்டம்‌, மதுரை தெற்கு வட்டம்‌, அவனியாபுரம்‌ கிராமத்தில்‌ வருகிற 15.01.2023-ம்‌ தேதியன்றும்‌ மற்றும்‌ வாடிப்பட்டி வட்டம்‌, பாலமேடு மற்றும்‌ அலங்காநல்தூர்‌ கிராமங்களில்‌ முறையே 16.01.2023 மற்றும்‌ 17.01.2023-ம்‌ தேதிகளில்‌ ஜல்லிக்கட்டு அரசால்‌ பிறப்பிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின்‌ அடிப்படையில்‌ நடத்தப்படவுள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில்‌ […]

சீனாவில் இருந்து இலங்கை வழியாக தமிழகத்தின் மதுரைக்கு வந்த ஒரு பெண் மற்றும் அவரது 6 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விவரங்களை அளித்த மதுரை மாவட்ட ஆட்சியர், தாயும் குழந்தையும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், கூடுதல் பரிசோதனைக்காக மாதிரிகள் பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். நேற்று வரை, தமிழகத்தில் 51 செயலில் உள்ள கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகத்தின் […]

உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை‌ மேற்கொண்டார். உருமாறிய கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா பரவலை தடுப்பதில் மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கண்காணிப்பை […]