மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  ஆண் பெண் இருவரின் சடலமும்  ஒரே வீட்டில் காணப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநிலத்தின்  தலைநகரான கொல்கத்தாவிற்கு தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஹரிதேவ்பூரில் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசியையடுத்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற காவல்துறை அங்கிருந்த இருவரது சடலங்களை மீட்டு  பிரேத  பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து  விசாரணையை தொடங்கியது காவல்துறை. […]

சென்னை கோயம்பேடு ரோகிணி  தியேட்டரின் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையிலிருந்து எடுக்கப்பட்ட சடலத்தால்  அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது . சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ளது பிரபலமான ரோகினி தியேட்டர் . இந்த தியேட்டரில் தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்படங்கள் எப்போதும் வெளியிடப்படும். இந்த தியேட்டரின் வளாகத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இதில் வாரம் ஒருமுறை லாரிகளின் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் தண்ணீர் […]

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டியில்  இளைஞர் ஒருவரின் சடலம் மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் மேல்நிலைகுடிநீர் தொட்டி ஒன்று பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக இருக்கிறது. அந்தத் தொட்டியிலிருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஊர் மக்கள் குடிநீர் தொட்டியில் சோதனை செய்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில் […]

துக்க வீட்டிற்கு குளிர்பதனபெட்டியை எடுத்துச் சென்று சடலத்தை உள்ளே வைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் கூத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்(22). இவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் நாகராஜ். நேற்று இவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதற்காக ஊரே ஒன்றுகூடியிருந்தது. உறவினர்கள் மாலை போன்றவற்றை வாங்கி வந்தனர். உயிரிழந்த வருக்கு ஈமக்கடன்கள் ஒரு பக்கம் நடந்து வந்தன. குளிர்பதன பெட்டிக்கு கூறப்பட்டதை அடுத்து அமரர் […]