நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்களில் இதுவரை 163 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய நாள் வெளியிடப்பட்ட தகவலுடன் ஒப்பிடும்போது, புதிதாக 5 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சீனாவில் இருந்த 151 இந்தியர்களும் இன்று அங்கிருந்து புறப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். நேபாளத்தின் சிலிமே பகுதியில் உள்ள […]

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் திடீர் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 320 வெளிநாட்டவர் உட்பட 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பின் (NDRRMA) தகவல்படி, வெள்ள பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் 272 உடல்களும், நவல்வராசி கிழக்கில் […]

ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் போராட்டங்கள் வியாழக்கிழமை உச்சத்தை எட்டின. நாடு முழுவதும் அரசு இணைய சேவையை முடக்கிய நிலையிலும், மதகுரு ஆட்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு தீவிரமடைந்தது. போராட்டங்களில் ஏற்பட்ட அடக்குமுறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. போராட்டத்தின் தொடக்கம் இந்த கலவரம் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி தெஹரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க பஜார் சந்தை மூடப்பட்டதால் தொடங்கியது. ஈரானின் நாணயம் […]

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை இரவு 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஜலாலாபாத்திற்கு கிழக்கே சுமார் 17 மைல் தொலைவில் இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11:47 மணிக்கு முதல் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.. அதைத் தொடர்ந்து […]