பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ, இன்று காலை பெங்களூரு அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார். இந்த விபத்தில் காயமடைந்த ஷைன், அவரது தாயார், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரிக்கு அருகிலுள்ள பாலக்கோட்டை அருகே காலை 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஷைன் டாமின் குடும்பத்தினர் எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது. அவர்களின் […]

தருமபுரி மாவட்டத்தில் இன்று பட்டா மாறுதல் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படும் போது வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தமிழ் நிலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் பட்டா பெயர் மாற்றம் செய்யலாம். https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற […]

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே இருக்கின்ற அசல்வாடியை சேர்ந்தவர் குமரேசன் (46) விவசாய ஆன இவர் தன்னுடைய உறவினர்களின் நிலத்தை விற்ற 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தன்னுடைய மாடுகளை விற்ற 2.50 லட்சம் என ஒட்டுமொத்தமாக 27.50 இலட்சத்தை தன்னுடைய வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் தான் நேற்று அதே ஊரில் இருக்கின்ற தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு குமரேசனும் அவருடைய மனைவியும் சென்றுள்ளனர் சற்று நேரத்திற்கு பிறகு […]

தருமபுரி மாவட்ட முன்னாள்‌ படைவீரர்களுக்கு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட முப்படையில்‌ பணிபுரிந்து வெளிவந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ சார்ந்தோருக்கான சிறப்பு சூறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ வருகின்ற 24.07.2023 அன்று மாலை 04.00 மணியளவில்‌ தருமபுரி மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெறவுள்ளது. தருமபுரி மாவட்டத்தை […]

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி பராமரிப்பு மைய கட்டடம், ரூ.20 கோடி மதிப்பிலான 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் ஆகியவை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “இன்று அரசு […]

வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு தமிழக அரசின் மானியம் திருப்பெருவதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழக அரசின்‌ படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ UYEGP திட்டத்தின்‌ கீழ்‌ வியாபாரம்‌ சார்ந்த தொழில்கள்‌ துவங்குவதற்கு திட்ட மதிப்பீட்டு தொகையும்‌ மானிய தொகையும்‌ உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில்‌ அதிகபட்சமாக ரூ.5 இலட்சம்‌ வரை வங்கியில்‌ கடன்பெற்று அதற்கு 25 சதவீத மானியம்‌ […]

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சிலர் மருத்துவ கல்வித்தகுதியின்றி கிளினிக் நடத்தி வருவதாக தர்மபுரி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகளின் இணை இயக்குனர் மருத்துவர் சாந்திக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து இணை இயக்குனர் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி பாலக்கோடு பகுதியில் மருந்து ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியம் சந்திரா மேரி கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம் போன்ற ஒரு அடங்கிய குழுவினர் […]

தர்மபுரி நகராட்சி 8வது வார்டு திமுகவின் கவுன்சிலராக இருந்தவர் புவனேஸ்வரன். இவர் தர்மபுரியில் பழைய ரயில்வே லைன் பகுதியில் இருக்கின்ற கோல்டன் தெருவில் வசித்து வருகிறார் இவருடைய மகள் ஹர்ஷா (23) இவர் தனியார் பார்மசி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை கோம்பை வனப்பகுதியில் பாறைகளுக்கு நடுவே அவர் வாயில் துணி வைத்து கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை […]

தருமபுரி பழைய ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன். இவரது தந்தை தர்மபுரி 8-வது வார்டு வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்ஷா (வயது 23). மருத்துவ மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 5-ந் தேதி தருமபுரியில் இருந்து ஓசூருக்கு சென்ற இந்த பெண் நேற்று […]

தர்மபுரி அருகே கடத்தூரான் கொட்டாய் அடுத்துள்ள நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இளம் பெண் ஒருவர் பாறைகளுக்கு இடையில் உயிரிழந்த நிலையில், கிடந்திருக்கிறார். அந்த வழியே சென்ற மக்கள் இது தொடர்பாக அதிகமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று இது குறித்து ஆய்வு நடத்தினார். அதோடு அதியமான் கோட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி […]