டீசல் மற்றும் பெட்ரோல் மீதான ‘சிறப்பு கூடுதல் கலால் வரிகளை மத்திய அரசு குறைத்துள்ளது.. தற்போது நடைபெற்று வரும் அமெரிக்கா-ஈரான் போரினால் ஏற்பட்ட விநியோகத் தடைகளுக்கு மத்தியில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரின் காரணமாக மக்கள் பீதியுடன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.. இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு ரூ.10 குறைத்துள்ளது. […]

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு […]

கடந்த சில மாதங்களாக, தொடர்ச்சியான சரிவு காணப்பட்ட கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளில் பதற்றம் உச்சத்தை எட்டியதே இதற்குக் காரணம். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை எண்ணெய் விலையில் 12 சதவீதம் வரை மிகப்பெரிய உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பேரல் விலை தற்போது 77 டாலருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. போர் பதற்றம் தொடர்ந்தால், விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]